
உலக தரம் உள்ள வீரர்
சுழற்பந்து விஷயத்தில் மட்டும், ஆஸ்திரேலியாவை விட இந்தியா ஒரு படி மேலே நிற்கிறது. இந்தியாவில் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளார். அஸ்வின் ஒரு உலக தரம் உள்ள சுழற்பந்து வீச்சாளர். ஆனால் ஆஸ்திரேலியாவில் அப்படி ஒரு உலக தரம் உள்ள சுழற்பந்து வீச்சாளர் இல்லை. அஸ்வின்தான் அந்த போட்டியை மாற்றப்போகும் துருப்பு சீட்டாக விளங்கப்போகிறார்.

முன்னேற்றம்
முத்தரப்பு ஒருநாள் தொடரில் பார்த்ததைவிட இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள், சிறப்பாக செயல்படுகிறார்கள். மோகித் ஷர்மாவின் வருகை இந்திய பந்து வீச்சை பலமானதாக மாற்றியுள்ளது. உமேஷ் யாதவும் முன்னேறியுள்ளார். முகமது ஷமிதான், இந்திய அணியின் பவுலிங் முதுகெலும்பு.

ஆஸ்திரேலியாவில் வேகம்
ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க், ஜான்சன் போன்றோர், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களைவிட வேகமாக பந்து வீசுகிறார்கள். ஆனாலும், இந்திய பவுலர்கள், அவர்களுக்கே உரித்தான பாணியில், சிறப்பானவர்களாக உள்ளனர்.

முதலில் பேட் செய்வது அவசியம்
சிட்னி பிட்ச் முன்பைவிட இப்போது வேகப்பந்து வீச்சுக்கு தக்கதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டாசில் எந்த அணி வென்றாலும், முதலில் பேட் செய்வது சிறப்பானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











