
2 முறை மான்கட் முறை அவுட்
இந்திய ஆப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய முன்னணி பௌலர்களின் ஒருவராக இருப்பவர். தொடர்ந்து அணியில் இடம்பிடிக்காவிட்டாலும், ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ளவர். மான்கட் முறையில் இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் உள்ளிட்டு இருமுறை எதிரணி வீரர்களை இந்த முறையில் அவுட்டாக்கி அதன்மூலம் விமர்சனங்களை அதிகமாக பெற்றவர்.
ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில்
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டிற்குள் முடங்கியுள்ள அஸ்வின், ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டர் மூலம் பதிலளித்தார். அதில் ரசிகர்கள் அவரை நோக்கி பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்பொழுது ஒரு நபர், அஸ்வினிடமிருந்து மற்றொரு மான்கட் அவுட்டை பார்க்க ஆவலாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
அஸ்வின் கேள்வி
இதற்கு பதிலளித்த ரவிச்சந்திரன் அஸ்வின், அந்த அவுட்டிற்கு பிறகு, தன்னை சுற்றிலும் எழுந்த விமர்சனங்களை நினைவுக்கூர்வதாக குறிப்பிட்டார். கடந்த 2009ல் இலங்கைக்கு எதிராகவும், கடந்த ஆண்டு ஐபிஎல்லில், ஜாஸ் பட்லரையும் அஸ்வின் மான்கட் முறையில் அவுட்டாக்கி அதன்மூலம் பல்வேறு விதமான விமர்சனங்களுக்கு உள்ளானார்.

அஸ்வின் பதில்
இதனிடையே டிவிட்டர் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்த அஸ்வின், முதல் சந்திப்பிலேயே தன்னை பதற்றத்துக்குள்ளாக்கிய வீரர், ஆஸ்திரேலியாவின் முன்னாள் துவக்க வீரர் மாத்யூ ஹேடன்தான் என்று கூறியுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2009 மற்றும் 2010ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரே நேரத்தில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











