அஸ்வின் மகிழ்ச்சி
அதில், கபில்தேவ் 434வது விக்கெட் எடுத்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது. கபில்தேவ் எனக்கு சிறிய வயதில் இருந்தே மிகவும் பிடிக்கும். அவரை பார்த்து, நான் சிறு வயதில் வேகப்பந்துவீச்சாளராக தான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினேன். தற்போது அவருடையை சாதனையை முறியடித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
கபில்தேவ் தந்த ஷாக்
நேற்று எனக்கு ஒரு பூங்கொத்து வந்தது. அதில் 435வது விக்கெட்டுக்கு வாழ்த்துகள் என்று இருந்தது. அதை யார் அனுப்பியது என்று பார்த்தால் கபில்தேவ் தான். இதனை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவர் நமது இந்திய கிரிக்கெட்டுக்காக பல சாதனைகளை படைத்துள்ளார் என்று அஸ்வின் கூறியுள்ளார்.
கபில்தேவ் புகார்
இந்த நிலையில், அஸ்வின் சாதனை குறித்து பேசிய கபில்தேவ், அஸ்வினுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்பட்டதே இல்லை. கிடைத்த வாய்ப்பை வைத்து அவர் இவ்வளவு விக்கெட் வீழ்த்தியதே ஆச்சரியம் தான். அவருக்கு போதிய வாய்ப்பு கிடைத்திருந்தால், அஸ்வின் பல ஆண்டுகளுக்கு முன்பே என் சாதனையை முறியடித்து இருப்பார்.
Recommended Video
500 விக்கெட்
என்னுடைய நேரம் முடிந்துவிட்டது. இன்னும் எதற்காக நான் அவருக்கு வழங்காமல் தொடர்ந்து 2வது இடத்திலே இருக்க வேண்டும். அஸ்வினுக்கு இப்போது 35 வயதாகி விட்டது. தற்போது அவர் தன்னுடைய அடுத்த இலக்காக 500 விக்கெட் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவர் புத்திசாலித்தனமான வீரர், அதனால் 500 விக்கெட்டுக்கு மேல் அவர் எடுப்பார்.