
சூர்யகுமாரின் சொதப்பல்
இந்த 3 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் தொடர்ச்சியாக கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றினார். அவர் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடுவதால், 3வது போட்டியில் சூர்யகுமாரின் பேட்டிங் வரிசை மாற்றப்பட்டது. வழக்கமாக 4வது இடத்தில் களமிறங்கிய அவரை கீழே இறக்கிவிட்டு, அக்ஷர் பட்டேல் மேலே களமிறங்கினார். அவரை தொடர்ந்து கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விளையாடினர். ஆனால் இந்த திட்டம் சொதப்பியது.

அஸ்வினின் விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஸ்ரேயாஸ் ஐயரின் காயத்தினால் ஆஸ்திரேலிய தொடரில் 4வது இடத்திற்கு ஒரு வீரர் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அவரின் காயம் தான் சூர்யகுமாருக்கு வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது. 3 பந்துகளை சந்தித்தார் 3 முறை டக் அவுட்டானார். உடனடியாக அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆட வேண்டுமா? சரியில்லை? என விமர்சனங்கள் குவிகிறது. அதுவும் இந்தியா தொடரை இழந்தவுடன் விமர்சனங்கள் அதிகரித்துவிட்டன.

இந்திய அணி திட்டம்
ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆர்டரை நன்கு பாருங்கள். மார்னஸ் லபுசாக்னே 5வது இடத்தில் தான் ஆடுவார். ஆனால் டேவிட் வார்னரால் 4வது இடத்திற்கு களமிறங்க வேண்டிய சூழல் வந்தது. ஆஸ்திரேலியா தோல்வியைடைந்திருந்தால் அது கேள்விகளை எழுப்பியிருக்கும். அதுபோன்று தான் சூர்யகுமாரும். டாப் ஆர்டரில் களமிறங்கிய அக்ஷர் பட்டேல், ஆஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சை ஒரு 10 ஓவர்கள் சமாளித்திருந்தால் பின் இந்தியாவுக்கு சாதகமான சூழல் வந்திருக்கும். அதன்பின் சூர்யகுமார் யாதவ் தனது அதிரடியை தொடங்கியிருப்பார்.

சரியான திட்டம்
இந்திய அணியின் திட்டம் மிகச்சரியாக தான் இருந்தது. ஆனால் எதிர்பார்க்காத ரன் அவுட் காரணமாக முடிவுகள் வேறு மாதிரி ஆகிவிட்டது. எனவே ஓரிரு போட்டிகளின் முடிவை வைத்துக்கொண்டு கருத்து தெரிவிக்க வேண்டாம் என்பதை போல அஸ்வின் கூறியுள்ளார். சூர்யகுமார் யாதவ் அடுத்ததாக ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார். அதன் மூலம் மீண்டும் தனது ஃபார்மை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











