விசாகபட்டினம்: ஆடுகளம் குறித்த கேள்விகள் அடிக்கடி முன் வைக்கப்படுவது இந்திய ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 455 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களுடன் தத்தளித்தது.

போட்டிக்கு பிறகு நிருபர்களை சந்தித்தார் அஸ்வின். அப்போது வழக்கம்போல நிருபர்களில் சிலர், "என்னப்பா.. இந்திய பிட்ச் தனது வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது போல" என்ற தொனியில் கேள்வி எழுப்பினர்.
ஏற்கனவே பலமுறை இந்திய பிட்ச் பற்றி நிருபர்கள் குறைபட்டுக்கொள்ளும் சம்பவங்களும், அதற்கு அஸ்வினினும் பதிலும் வழங்கப்பட்டிருந்ததால் அஸ்வின் இம்முறை கோபப்பட்டார். ஆனால் அதை சிரிப்பாக வெளிக்காட்டியபடி பேட்டியை தொடர்ந்தார்.
"பிட்ச் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டால் பிரஸ் மீட்டில் அமைதியாக இருந்துவிடலாம் என நினைக்கிறேன். இந்திய பிட்ச் எப்படி இருக்க வேண்டுமோ, அதேபோலத்தான் விசாகபட்டினம் பிட்ச் உள்ளது. ஒருநாள் முழுக்க பத்திரிகையாளர்கள் கிரிக்கெட்டை தொடர்ந்து பார்த்தால் போதும், பிட்ச் எப்படியுள்ளது என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம்" என்று அஸ்வின் பதிலளித்தார்.
Whenever there is a Test match in India, the spotlight is always on the pitch and it is no different in the ongoing 2nd Test between the hosts and England.
ஆடுகளம் குறித்த கேள்விகள் அடிக்கடி முன் வைக்கப்படுவது இந்திய ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.