மும்பை:இந்திய நட்சத்திர வீரரும், மன்கட் புகழ் பரப்பியவருமான அஸ்வின் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடுகிறார்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டார். அந்த தொடரில் அவர் செய்த மன்கட் அவுட்டுகள் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியது.
இந் நிலையில், இந்தாண்டு கவுண்டி சீசனில் அஸ்வின் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக பங்கேற்க உள்ளார். இது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் கூறி இருப்பதாவது:பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு கவுண்டி அணி நிர்வாகத்திடமிருந்து அழைப்பு வந்தால் இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்க அனுமதி உண்டு என ஏற்கனவே பிசிசிஐ தெரிவித்திருந்தது.
அதன்படி அஸ்வின் கவுண்டி கிரிக்கெட்டிர் விளையாட முழு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அஸ்வின் 6 போட்டிகளில் பங்கேற்க உள்ளார். பிசிசிஐ நிர்வாக இயக்குனர் மட்டும் ஆட்சேபணை சான்றிதழில் கையொப்பமிட்டால் அவர் இங்கிலாந்து சென்று விடுவார் என்று கூறினர்.
சூப்பர்மேன் வேலை எல்லாம் மூட்டை கட்டி வைக்கணும்... புரியுதா? அணியினருக்கு அட்வைஸ் சொன்ன அந்த கேப்டன்
இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் அஜின்க்யா ரகானே ஏற்கனவே ஹாம்ஷைர் அணியில் விளையாட இங்கிலாந்து சென்று விட்டார்.கவுண்டி கிரிக்கெட்டில் ஹாம்ஷைர் அணிக்காக பங்கேற்கும் முதல் இந்திய வீரர் ரகானே என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வினை போலவே ரகானேவும் ஒருநாள் மற்றும் டி 20 அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.