பலமான அணி
இந்த ஆசிய கோப்பை தொடரில் மிகவும் பலமான அணி என்றால் அது பாகிஸ்தான் அணிதான். இந்திய அணியை விட அந்த அணியின் பேட்டிங்கும், பவுலிங்கும் மிகவும் பலமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் போட்டி என்பதால் இதற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
விளையாடும் இந்திய அணி
இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், அம்பதி ராயுடு, தோனி, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்தீப் ஆகியோர் விளையாடுகிறார்கள்.
பாகிஸ்தான் அணியில் யார்
பாகிஸ்தான் ஆணியில் ஷார்ப்ரஸ் அகமது, சோயப் மாலிக், பகார் சாமன், இமாம் உல் ஹக், ஆசிப் அலி, பஹீம் அஷ்ரப், ஸாதப் கான், முகமது அமீர், ஹாசன் அலி, உஸ்மான், பாபர் ஆசம் ஆகியோர் விளையாடுகிறார்கள். இரண்டு அணிகளும் சம பலத்தோடு உள்ளது.
ஸ்கோர் இப்போது
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்றது. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்தியா அபாரமாக பந்து வீசி வருகிறது. 22 ஓவருக்கு 3 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் 86 ரன்கள் எடுத்துள்ளது. ஆனால் முக்கியமான நேரத்தில் தோனி கேட்ச் ஒன்றைவிட்டு சொதப்பினார்.