
பாகிஸ்தான் எப்படி இருந்தது?
இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றே ஆக வேண்டும். இந்த தொடர் துவங்கும் முன்பு, "இந்தியாவை விட பாகிஸ்தான் அணி தான் கோப்பை வெல்லும் தகுதி படைத்தது. சொந்த மண் போன்ற ஐக்கிய அரபு நாட்டில் விளையாடுவதால் அந்த அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது" என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறினர்.

பாகிஸ்தான் மீளுமா?
எனினும், அதற்கு மாறாக, இந்தியாவிடம் இரண்டு முறை தோல்வி அடைந்து, ஆப்கானிஸ்தான் அணியுடன் கடைசி ஓவர் வரை போராடி பெற்ற வெற்றியோடு சோர்வடைந்து உள்ளது அந்த அணி. அதில் இருந்து பாகிஸ்தான் மீளுமா? என்பதே இன்றைய போட்டியின் முக்கிய விஷயமாக இருக்கிறது.

வங்கதேசம் வெல்லுமா?
வங்கதேச அணியில் பேட்டிங் மிக மோசமாக உள்ளது. அந்த அணியில் ஒன்றிரண்டு வீரர்கள் தான் ரன் அடிக்கிறார்கள். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளிக்கிறார்கள். அந்த அணியின் முக்கிய வீரர் தமிம் இக்பால் காயமடைந்தது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக உள்ளது.

இன்று பரபரப்பான ஆட்டம்
இன்றைய ஆட்டத்தில் வென்றால் இறுதி வாய்ப்பு என்பதால் வங்கதேசம் இன்று தன் கடைசி மூச்சு வரை போராடும் என எதிர்பார்க்கலாம். பாகிஸ்தான் இன்று தோல்வி அடைந்தால் கடும் விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, பாகிஸ்தான் வெற்றிக்கு முயற்சி செய்யும். இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.


Click it and Unblock the Notifications