
விராட் கோலி பேட்டிங்
பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற முதல் போட்டியில் 34 பந்துகளில் 35 ரன்களை அடித்து துரதிஷ்டவசமாக அவுட்டான விராட் கோலி, ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் 44 பந்துகளில் 59 ரன்களும் அடித்து மேலும் ஒரு படி சென்றார். எனினும் அவரின் ஸ்ட்ரைக் ரேட் தான் சற்று குறைவாக உள்ளது என ரசிகர்கள் கவலையாகவே உள்ளனர்.

கம்பீர் கருத்து
இந்நிலையில் கோலியை 3வது இடத்தில் இருந்து நீக்க கம்பீர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணியில் தற்போது மிகச்சிறப்பான ஃபார்மில் இருப்பவர் சூர்யகுமார் யாதவ் தான். எனவே விராட் கோலியை 3வது இடத்தில் இருந்து நீக்கிவிட்டு, சூர்யகுமாரை இனி அங்கு களமிறக்க வேண்டும். இதனால் இன்னும் சிறப்பாக செயல்படுவார். இதற்கு சில முக்கிய காரணங்களும் உள்ளன.

என்ன காரணம்
விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக நல்ல பார்மில் இருக்கும் ஒருவரை நீங்கள் பின்தள்ள கூடாது. சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மிக அபாரமாக செயல்பட்டிருந்தார். சூர்யகுமார் யாதவ் 30 வயதை தொட்டுள்ளதால் அவருக்கு இன்னும் நிறைய காலம் கிடையாது. எனவே அவரை அதற்குள்ளாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கோலிக்கும் நல்லது
சூர்யகுமார் யாதவ் தற்போது தான் சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறார். அவரின் ஆர்வத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விராட் கோலி நிறைய அனுபவம் கொண்டவர். அவர் 4வது இடத்தில் களமிறங்கினால் போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுவார். எனவே டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இதனை யோசிக்க வேண்டும் என கம்பீர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











