
ஆசிய கோப்பை போட்டி
கடைசியாக இரு அணிகளும் மோதிய டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. எனவே பதிலடி கொடுக்க வேண்டும் என இந்திய ரசிகர்களும், மீண்டும் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துள்ளனர். இதனால் சமூக வலைதளங்களும் பரபரப்படைந்துள்ளது.

அறிவுரை என்ன
இந்நிலையில் இந்த போட்டி குறித்து ஸ்ரீநகர் என்.ஐ.டி கல்லூரி மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் யாரும் ஒன்றாக அமர்ந்து இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்க்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களை பல பிரிவுகளாக பிரித்து தனி தனி அறைகளில் போட்டியை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

என்ன தண்டனை
போட்டி முடிந்த பிறகு எந்த அணி வெற்றி பெற்றாலும், அது குறித்து எந்தவொரு பதிவையும் சமூக வலைதளங்களில் மாணவர்கள் பதிவிடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி மாணவர்கள் ஏதேனும் சர்ச்சையை ஏற்படுத்தினால் குறைந்தபட்சம் ரூ.5,000 அபராதத்துடன் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் விளக்கம்
இதுகுறித்து பேசியுள்ள என்.ஐ.டி அதிகாரிகள், இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் போட்டியை மாணவர்கள் விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும். அதனை தாண்டி அவர்களின் சிந்தனை வேறு வகையில் சென்றுவிடக்கூடாது. அது தேசத்திற்கு நல்லதல்ல என்ற காரணத்திற்காகதான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











