
பாகிஸ்தான் ஆட்டம்
பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற போதும், விராட் கோலி தான் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் என்பதில் சந்தேகமே இல்லை. முதல் போட்டியில் 34 பந்துகளில் 35 ரன்களை அடித்த விராட் கோலி, பலமுறை அதிர்ஷ்டவசமாக கேட்ச்களில் இருந்து தப்பினார். ஆனால் சூப்பர் 4 போட்டியில் பவுலர்களுக்கு எந்தவித இடமும் கொடுக்கவே இல்லை.

அதிரடி ஆட்டம்
முதல் பந்து முதலே அதிரடியாக விளையாடிய அவர், 44 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். ஒருமுறை கூட விராட் கோலியை அவுட்டாக்கும் சிறிய வாய்ப்பு கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. அந்த அளவிற்கு ஆட்டத்தையும், பாகிஸ்தானின் பவுலிங்கையும் கணித்து விளையாடினார்.

சுவாரஸ்யமான வீடியோ
இந்நிலையில் கோலி கவனம் செலுத்திய முக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆட்டத்தின் 8வது ஓவரின் போது முகமது நவாஸின் பந்துவீச்சை விராட் கோலி எதிர்கொண்டார். அப்போது, கோலி பந்துவீச்சாளரை கவனிக்க, அவருக்கு பின்னால் நின்றிருந்த விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், ஆஃப் சைட் திசையில் ஒரு ஃபீல்டரை நகர்த்தி நிறுத்தினார்.

கோலிக்கே ஸ்கெட்ச்
இதை கோலி கவனிக்கவில்லை என நினைத்துக்கொண்டு பவுலரிடம் ஆஃப்சைடில் பந்துவீச கூறினார். ஆனால் அதனை தனது ஓர கண்ணால் சாதூர்யமாக கவனித்தார் கோலி. இதனால் பந்துவீச்சாளர் எந்த லெந்த்-ல் போடுகிறார் என்பதை சரியாக கணித்து அடித்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும், கோலிக்கே ஸ்கெட்ச்சா என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











