For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை கிரிக்கெட்..பாகிஸ்தான் கொடுத்த புதிய யோசனை..சம்மதிக்குமா இந்தியா? ஒரே கல்லில் 2 மாங்காய்

கராச்சி : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் இந்தத் தொடர் அங்கு நடந்தால் நாங்கள் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டோம் என இந்தியா அறிவித்தது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தொடரை வேறு நாட்டுக்கு மாற்றுங்கள் என இந்தியா போர் கொடி தூக்கியது.

இதற்கு பதிலடி தந்த பாகிஸ்தான் இந்தியா ஆசிய கோப்பை தொடருக்காக பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், நாங்கள் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை தொடருக்கு வரமாட்டோம் என மிரட்டியது.

தோல்வி

தோல்வி

இது தொடர்பாக ஆலோசனை நடத்தி தீர்வு காண கடந்த பிப்ரவரி நான்காம் தேதி பஹைரனில் அனைத்து நாடுகளும் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. எனினும் இதில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களுடைய நிலைப்பாட்டில் தீவிரமாக இருந்ததால் இந்த கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதனை அடுத்து அடுத்த மாதம் மீண்டும் ஒரு கூட்டத்தை நடத்த உறுப்பினர் நாடுகள் முடிவெடுத்தனர்.

பேச்சுக்கே இடமில்லை

பேச்சுக்கே இடமில்லை

இதற்கிடையில் இந்தியா பாகிஸ்தான் என இரு நாடுகளுக்கும் எவ்வித பிரச்சனையும் இன்றி தொடரை நடத்த தற்போது ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு குறித்து விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானில் இருந்து மாற்றுவதற்கான பேச்சுக்கே இடம் இல்லை. எனினும் இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

பாகிஸ்தான் யோசனை

பாகிஸ்தான் யோசனை

இதனால் இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த நாங்கள் முன்வந்துள்ளோம். மேலும் ஒருவேளை இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றாலும் அதனை துபாயில் நடத்த நாங்கள் சம்மதிக்கிறோம். இந்த யோசனையை இந்தியா ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஆசிய கோப்பை போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

ஏற்குமா இந்தியா

ஏற்குமா இந்தியா

இதன்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பாகிஸ்தான் அடித்துள்ளது. இந்தியா பாகிஸ்தானுக்கு வருவது தான் பிரச்சனை என்பதால் இந்திய போட்டிகளில் முழுமையாக வெளிநாட்டில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இதற்கு இந்தியா ஒப்புக்கொண்டே ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவின் அழுத்தத்தால் பாகிஸ்தான் இறங்கி வந்திருப்பதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Story first published: Thursday, February 16, 2023, 23:21 [IST]
Other articles published on Feb 16, 2023
English summary
Asia cup 2023 - Pakistan gives amazing plan to tackle india ஆசிய கோப்பை கிரிக்கெட்.. பாகிஸ்தான் கொடுத்த புதிய யோசனை.. சமதிக்குமா இந்தியா? ஒரே கல்லில் 2 மாங்காய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+