For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“நீங்க 5 பேரும் ஆசிய கோப்பைக்கு போக வேண்டாம்”.. ஜெய்ஸ்வால், பிரசித் உட்பட ஐவருக்கு பிசிசிஐ உத்தரவு

மும்பை: செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கவுள்ள 2025 ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில், ஸ்டாண்ட்பை (காத்திருப்பு) வீரர்களாக அறிவிக்கப்பட்ட ஐந்து பேரையும் துபாய்க்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது.

2025 ஆசியக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்திருந்தது. இவர்களுடன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரல் ஆகிய ஐந்து பேரும் ஸ்டாண்ட்பை வீரர்களாகப் பெயரிடப்பட்டிருந்தனர். வழக்கமாக, இதுபோன்ற பெரிய தொடர்களுக்கு ஸ்டாண்ட்பை வீரர்கள் வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களாகவோ அல்லது மாற்று வீரர்களாகவோ அணியுடன் பயணம் செய்வார்கள்.

Asia Cup 2025 BCCI Decides Not to Take five Standby Players including Jaiswal Prasidh to Dubai

ஆனால், இந்த முறை அந்த வழக்கத்தை பிசிசிஐ மாற்றியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "இல்லை, ஸ்டாண்ட்பை வீரர்கள் யாரும் பிரதான அணியுடன் துபாய்க்குப் பயணம் செய்ய மாட்டார்கள்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய டி20 அணியில் ஏற்கெனவே தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில், அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இருப்பதால், இவர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் மட்டுமே யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தேவை எழும்.

அதேபோல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மாற்று வீரராகவே பிரசித் கிருஷ்ணா கருதப்படுகிறார். இதனால், தேவைப்பட்டால் மட்டுமே மாற்று வீரர்கள் துபாய்க்கு அழைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

செப்டம்பர் 4-ல் துபாயில் கூடும் இந்திய அணி

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி, செப்டம்பர் 4-ம் தேதி துபாயில் ஒன்று கூடவுள்ளது. வீரர்கள் அனைவரும் தங்கள் நகரங்களிலிருந்து நேரடியாக துபாய்க்குப் பயணம் செய்ய பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. செப்டம்பர் 5-ம் தேதி துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் இந்திய அணியின் முதல் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

இந்தியா தனது முதல் போட்டியில் செப்டம்பர் 10-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14-ம் தேதியும், ஓமனுக்கு எதிரான போட்டி செப்டம்பர் 19-ம் தேதியும் நடைபெறவுள்ளன.

2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய டி20 அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.

Story first published: Friday, August 29, 2025, 19:04 [IST]
Other articles published on Aug 29, 2025
English summary
Asia Cup 2025: BCCI Decides Not to Take five Standby Players including Jaiswal, Prasidh to Dubai. The BCCI has decided that none of the five standby players, including Yashasvi Jaiswal, will travel with the main squad to Dubai for the Asia Cup 2025 tournament.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+