For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிங்கு சிங்கிற்கு இடமில்லை? டெஸ்ட் கேப்டன் வருவதால் ஆசிய கோப்பை அணியில் நீக்கப்பட வாய்ப்பு

துபாய்: சுப்மன் கில் - ரிங்கு சிங் போட்டி - ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்க உள்ள 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட புதிய இந்திய அணி களமிறங்குகிறது.

இந்த நிலையில், இந்திய அணியில் இடம்பிடிக்க பல வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் அணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளதால், அதிரடி ஃபினிஷர் ரிங்கு சிங்கின் இடம் கேள்விக்குறியாகி உள்ளது.

Asia Cup 2025 Rinku Singh spot in doubt as Shubman Gill s Return Puts Finisher s Spot in Jeopardy

மீண்டும் அணிக்குள் நுழையும் சுப்மன் கில்

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில், கடந்த சில டி20 தொடர்களில் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இருப்பினும், சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அவரது பெயர் ஆசிய கோப்பைக்கான டி20 அணியில் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

தொடக்க வீரராகவோ அல்லது மாற்று தொடக்க வீரராகவோ சுப்மன் கில் இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அவர் அணிக்குள் வந்தால், பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ரிங்கு சிங்கிற்கு என்னதான் ஆச்சு?

2023 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸர்களை விளாசி, இந்திய கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்தவர் ரிங்கு சிங். அதைத் தொடர்ந்து, இந்திய டி20 அணியின் நிரந்தர ஃபினிஷராக உருவெடுத்தார். சர்வதேசப் போட்டிகளிலும் 161 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டுடன் தனது திறமையை நிரூபித்தார்.

ஆனால், சமீப காலமாக அவரது கிரிக்கெட் வாழ்க்கை சற்று சரிவைச் சந்தித்துள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கான பிரதான அணியில் இடம்பிடிக்கத் தவறிய அவர், ரிசர்வ் வீரராகவே இருந்தார். மேலும், 2024 மற்றும் 2025 ஐபிஎல் சீசன்களில் கொல்கத்தா அணிக்காக அவருக்கு அதிக பேட்டிங் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2025 சீசனில் வெறும் 206 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது இந்திய அணியில் அவரது இடத்தைப் பெரிதும் பாதித்துள்ளது.

கழட்டிவிடப்பட காரணம் என்ன?

இந்திய அணியின் முதல் ஐந்து பேட்டிங் இடங்கள் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டன. அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அந்த இடங்களில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், சுப்மன் கில் அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற கூடுதல் தொடக்க வீரர்களை அணியில் சேர்க்கும்போது, ஒரு வீரரை நீக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ரிங்கு சிங் ஒரு சிறப்பு வாய்ந்த ஃபினிஷர் மட்டுமே. ஆனால், இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், பேட்டிங் அல்லது பந்துவீச்சு என ஏதாவது ஒன்றில் மட்டும் கவனம் செலுத்தும் வீரர்களை விட, ஆல்ரவுண்டர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார் என கூறப்படுகிறது. இதன் காரணமாக, பந்துவீசும் திறன் கொண்ட சிவம் துபே போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, ரிங்கு சிங் கழட்டிவிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் போன்றோர் தேர்வு செய்த உத்தேச அணியில் கூட, சுப்மன் கில்லுக்கு இடம் கொடுக்கப்பட்டு, ரிங்கு சிங் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 19-ம் தேதி அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. அப்போது, ஃபினிஷர் ரிங்கு சிங்கின் எதிர்காலம் என்ன என்பது தெரிந்துவிடும்.

Story first published: Sunday, August 17, 2025, 11:57 [IST]
Other articles published on Aug 17, 2025
English summary
Asia Cup 2025: Rinku Singh spot in doubt as Shubman Gill's Return Puts Finisher's Spot in Jeopardy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+