துபாய் : ஆசிய கோப்பையின் முதலாவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஏ பிரிவில் இருந்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.. இதில் பங்களாதேஷ் அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
இப்போட்டியில் நடந்த டாப் 5 நிகழ்வுகள் இதோ :
1 மலிங்காவின் அதிரடி தொடக்கம்
ஓராண்டு இடைவெளிக்கு பிறகு இலங்கை அணிக்காக களமிறங்கிய மலிங்கா மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதனை நிறைவேற்றும்வகையில் அவர் நேற்று மிக சிறப்பாக பந்துவீசினார். முதலாவது ஓவரிலேயே பங்களாதேஷ் அணியின் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். நேற்றைய போட்டியில் அவர் 10 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

