
ரெய்னா - யுவராஜ்
இன்றைய போட்டியில் ரெய்னாவும், யுவராஜும் முக்கிய வீரர்களாக இருப்பார்கள். இருவரும் டி 20 நிபுணர்கள் ஆவர். சாலிடாக ஆடக் கூடியவர்கள்.

முதல் இரு போட்டிகளில் சரியில்லை
இருப்பினும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் இருவரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இருப்பினும் வாய்ப்பு கிடைத்து நின்று விட்டால் பிரித்து மேய்ந்து விடக் கூடிய திறமை படைத்தவர்கள்.

மயக்கும் மிர்பூர்
மிர்பூர் விக்கெட்டை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் ரெய்னா திணறுகிறார் என்பது உண்மைதான். இருப்பினும் அவரது அனுபவம் அணிக்கு உதவும்.

யுவராஜ் சிங்
முதல் இரு போட்டிகளில் யுவராஜ் சி்ங் முறையே 15, 14 ஆகிய ரன்களையே எடுத்துள்ளார். இருப்பினும் நெருக்கடி நேரத்தில் சிறப்பாக ஆடக் கூடியவர் யுவராஜ் என்பதை மறுப்பதற்கில்லை.

காயத்தால் 3 பேருக்கு சிக்கல்
டோணி, ஷிகர் தவான், ரோஹித் சர்மா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் இன்றைய போட்டியில் அவர்கள் விளையாடுவது சந்தேகம்தான். எனவே யுவராஜ் அதிரடியாக ஆடவேண்டும். ரெய்னா நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











