For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"யாருக்கும் தெரியாமல் பேசியது போதும்.. லைவ்வில் மக்கள் முன் பேசுங்க!" கொந்தளித்த மனோஜ் திவாரி

மும்பை: 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் திறமையான வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் நீக்கப்பட்டது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், மேற்கு வங்க கிரிக்கெட் வீரருமான மனோஜ் திவாரி, இந்த முடிவைக் கடுமையாகச் சாடியதுடன், "இனிமேல் அணித் தேர்வு நடைபெறும் கூட்டங்களை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும்" என்று ஒரு அதிரடியான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து 600 ரன்களுக்கு மேல் குவித்து, தன் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றவர் ஸ்ரேயாஸ் ஐயர். அதேபோல், இளம் அதிரடி தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இத்தகைய சிறப்பான ஃபார்மில் இருக்கும் இருவரையும் அணியில் சேர்க்காதது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Asia Cup Manoj Tiwary Criticizes Team Selection Demands Live Broadcast of Selection Meetings

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மனோஜ் திவாரி, "தகுதியான இரண்டு வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயரும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தகுதியானவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனால்தான் நான் நீண்ட காலமாக ஒன்றைச் சொல்லி வருகிறேன். அணித் தேர்வுக் கூட்டங்களை நேரலையில் ஒளிபரப்புங்கள். அப்போதுதான் எந்த வீரர் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார், யார் ஏன் நீக்கப்பட்டார் என்ற வெளிப்படைத்தன்மை ரசிகர்களுக்குத் தெரியும்," என்று காட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரையும் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார். "கம்பீரின் பழைய பேட்டிகளைப் பார்த்தால், 'யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற ஒரு வீரரை டி20 அணியை விட்டு வெளியே வைப்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது' என்று கூறியிருப்பார். ஆனால், இன்று அவரே பயிற்சியாளராக இருக்கும்போது, ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடமில்லை," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

செய்தியாளர் சந்திப்பில் வந்து, ஓரிரு வரிகளில் விளக்கம் சொல்லிவிட்டுச் செல்வது சரியான அணுகுமுறை அல்ல என்று கூறிய திவாரி, இந்த நேரலை ஒளிபரப்பு முறையே தேர்வில் உள்ள குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார். மனோஜ் திவாரியின் இந்த கோரிக்கை, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அணித் தேர்வின் வெளிப்படைத்தன்மை குறித்த ஒரு புதிய விவாதத்தை உண்டாக்கியுள்ளது.

Story first published: Saturday, August 23, 2025, 11:15 [IST]
Other articles published on Aug 23, 2025
English summary
Asia Cup: Manoj Tiwary Criticizes Team Selection, Demands Live Broadcast of Selection Meetings
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+