
கேப்டன்
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரஹானே மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரின் கேப்டன்சி பெரிய அளவில் பாராட்டுக்கு உள்ளாகி உள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் ரஹானே மிகவும் சிறப்பாக கேப்டன்சி செய்து வருகிறார் என்று முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.

கவாஸ்கர்
கவாஸ்கர் தெரிவித்துள்ள கருத்தில், ரஹானே சிறப்பாக செயல்படுகிறார். அவர் நன்றாக திட்டம் வகுக்கிறார். பலரும் இவரின் கேப்டன்சியை கவனிக்க தொடங்கி உள்ளனர். ஒரு கேப்டனாக பொறுப்பை உணர்ந்து ஆடுகிறார்.

எப்படி
அதிலும் இவர் பவுலிங் ரொட்டேஷன் அனுப்பும் முறை, பீல்டர்களை நிற்க வைக்கும் முறை எல்லாம் மிகவும் சிறப்பாக உள்ளது. மிகவும் கூலாக இருக்கும். கோலி தனது கோபத்தை வெளியில் காட்டுவார்.

ரஹானே
ஆனால் ரஹானே அப்படி ஆக்ரோஷமான வீரர் கிடையாது. ரஹானே தனது கோபத்தை எல்லாம் வெளியில் காட்டுவது இல்லை. அவர் தனது திட்டமிடலில் திறமையை வெளிப்படுத்துகிறார்.

சிறப்பு
அவர் சிறப்பாக ஆடினாலும் நான் அவரை பாராட்ட முடியாது. ஏனென்றால் நான் மும்பை வீரருக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று கூறி விடுவார்கள். நான் பேசினால் தப்பாக அதை மாற்றுவார்கள். நான் பாரபட்சமாக இருக்கிறேன் என்று கூறி விடுவார்கள். அதனால் நான் அப்படி இருக்க விரும்பவில்லை என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

மோதல்
கவாஸ்கருக்கும் கோலிக்கும் கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வருகிறது. கோலி விடுப்பு எடுத்து இந்தியா திரும்பியதை கூட கவாஸ்கர் விமர்சனம் செய்து இருந்தார். இந்த நிலையில் தற்போது ரஹானேவை கவாஸ்கர் பாராட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications