விமர்சனம்
இந்திய அணியின் பவுலிங் ஆர்டரில் கேப்டன் கோலி எடுத்த முடிவுகள் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இன்று இந்திய அணியின் பவுலர்கள் யாரும் சரியாக பவுலிங் செய்யவில்லை. பும்ரா, ஷமி, சாஹல், சைனி என்று இன்று பவுலிங் செய்த யாருமே சரியாக பந்து வீசவில்லை.
ஜடேஜா
இன்று பவுலிங் செய்தவர்களில் ஜடேஜா, பாண்டியா மட்டுமே கொஞ்சம் சிறப்பாக ஆடினார்கள். பாண்டியா 4 ஓவரில் 1 விக்கெட் எடுத்தார். ஜடேஜா 7 ஓவர்களை நன்றாக வீசினாலும் கடைசி மூன்று ஓவர்களை சரியாக வீசவில்லை. இதனால் இந்திய கேப்டன் கோலி 6வது பவுலராக யாரை அனுப்பலாம் என்று ஆலோசனை செய்து வந்தார்.
மயங்க்
இதையடுத்து இன்று மயங்க் அகர்வாலை பவுலிங் செய்ய கோலி அனுப்பினார். 6வது பவுலராக மயங்க் அகர்வால் இன்று ஓவர் செய்தார். இவர் ஒரு ஓவர் போட்டு அதிலும் 10 ரன்கள் கொடுத்தார்.
மோசம்
இந்திய பவுலர்கள் சரியாக பவுலிங் செய்யாத நிலையில் மயங்க் எல்லாம் வந்து பவுலிங் செய்யும் நிலை ஏற்பட்டது.மயங்க் எல்லாம் பவுலிங் செய்யும் அளவிற்கு இந்திய அணியின் பவுலிங் மிக மோசமாக இருந்தது. இந்த நிலையில் மயங்க் அகர்வாலும் இன்று 10 ரன்களை ஒரு ஓவரில் கொடுத்தார்.
மயங்க் பவுலிங்
இந்த நிலையில் பாண்டியாவிற்கு அதன்பின் கோலி ஓவர் கொடுத்தார். இந்திய அணியில் 6வது பவுலர் பிரச்சனை தற்போது உருவாகி உள்ளது. இந்திய அணியின் பவுலிங் ஆர்டரில் கேப்டன் கோலி எடுத்த முடிவுகள் பெரிய அளவில் ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக இருந்தது.