
எப்படி
இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து 326 ரன்கள் எடுத்தது. தற்போது இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் புஜாரா ஆடும் விதம் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.

விமர்சனம்
முதல் இன்னிங்சில் புஜாரா வெறும் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் இன்று நடந்த இரண்டாவது இன்னிங்சிலும் வெறும் 3 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இரண்டிலும் சரியாக பாட் கும்மின்ஸ் ஓவரில் புஜாரா அவுட் ஆனார்.

புஜாரா
புஜாரா தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாக காரணமே, அவர் தனது பழைய பேட்டிங் ஸ்டைலை மறந்ததுதான் காரணம் என்கிறார்கள். புஜாரா பேட்டிங் நிற்கும் முறை தொடங்கி அவர் ஷாட்களை தேர்வு செய்யும் முறை வரை எதுவும் பாராட்டும் வகையில் இல்லை. முன்பெல்லாம் புஜாரா மிகவும் பொறுமையாக ஆடுவார்.

மோசம்
ஆனால் இப்போதெல்லாம் தேவையில்லாத ஷாட்களை தேடி தேடி அவசரமாக அடிக்கிறார். அதிலும் இன்று இரண்டாவது இன்னிங்சில் அவர் ஆடிய விதம் மிகவும் மோசமாக இருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக ஆடி வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக மோசமாக தோல்வி அடைந்தது.

தோல்வி
இந்த தோல்விக்கு பின் தற்போது கோலியும் அணியில் இல்லாத நிலையில் இந்திய அணி வீரர்கள் பொறுப்பை உணர்ந்து ஆடி வருகிறார்கள். ரஹானே, பும்ரா, கில் , பண்ட் வரை எல்லோரும் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார்கள் .

புஜாரா
ஆனால் புஜாரா அப்படி பொறுப்பை உணர்ந்து ஆடுவது இல்லை. இந்திய அணியில் தற்போது சீனியரான வீரர் புஜாராதான். அப்படி இருக்கும் போது புஜாரா இப்படி பொறுப்பின்றி ஆடுவது, அதிலும் வெற்றிபெற வாய்ப்பு இருக்கும் எளிதான போட்டியில் இப்படி ஆடுவது விமர்சனத்தை சந்தித்துள்ளது. இந்திய அணியின் பயிற்சி குழு இதனால் புஜாரா மீது கோபத்தில் உள்ளது என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications