
பாகிஸ்தான் சுற்றுப்பயணம்
இப்படிபட்ட சூழலில், பாகிஸ்தானுக்கு துனிந்து சென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் அந்நாட்டிற்கு சென்றிருக்கும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது. சமீபத்தில் ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்தது. ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸை கூட ஆடவில்லை.

2வது டெஸ்ட்
வெற்றிக்கான முதல் படியை எடுத்து வைக்கும் 2வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 12ம் தேதி முதல் நடைபெறுகிறது. இப்போட்டி கராச்சியில் தேசிய மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் இன்று திடீரென ஆஸ்திரேலிய வீரர்கள் இருக்கும் ஹோட்டல் மற்றும் கராச்சி மைதானத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கர குண்டுவெடிப்பு
முதல் டெஸ்ட் போட்டி நடந்துக்கொண்டிருந்த போது, சில கிலோ மீட்டர் தூரம் தள்ளியுள்ள பெஷாவார் பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 50 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர ஆலோசனை
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானுடன் அவசர ஆலோசனை நடத்தியது. இதனையடுத்து கராச்சியில் எந்தவித பாதுகாப்பு குறைபாடுகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காக பெரும் போலீஸ் படையை குவித்துள்ளது. மைதானத்தில் ஆபத்து நிறைந்த பொருட்கள் உள்ளதா என்றும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications