டெஸ்ட் தொடர்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
சொதப்பலான ஆட்டம்
இந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லாபுசாக்னே இருவரும் சொதப்பலான ஆட்டங்களையே தந்துள்ளனர். அஸ்வின், பும்ரா உள்ளிட்ட இந்திய பௌலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறியுள்ளனர்.
முறியடிக்க வேண்டும்
இந்நிலையில், இந்திய பௌலர்களின் திட்டங்களை முறியடித்து அவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை அடுத்ததாக விளையாடவுள்ள 3வது மற்றும் 4வது போட்டிகளில் அளிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் துணை கோச் ஆன்ட்ரூ மெக்டொனால்ட் அறிவுறுத்தியுள்ளார்.
துணை கோச் நம்பிக்கை
இந்த இரு வீரர்களையும் கட்டுப்படுத்த இந்தியா சிறப்பான திட்டங்களை வகுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த போட்டிகளில் சரியாக விளையாடாவிட்டாலும் ஸ்மித் மற்றும் லாபுசாக்னே இருவரும் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவத்துள்ளார்.