சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலியா கேப்டன் கிளார்க் நாளையுடன் ஓய்வு!!
சிட்னி: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நாளையுடன் ஓய்வு பெற உள்ளதாக ஆஸ்திரேலியாவின் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் உலகக் கோப்பை போட்டிகளை நடத்துகிற நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டியுடன் தாம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக ஆஸ்திரேலியாவின் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவித்துள்ளார்.

33 வயதாகும் மைக்கேல் கிளர்க் மொத்தம் 244 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,907 ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Saturday, March 28, 2015, 8:40 [IST]
Other articles published on Mar 28, 2015


Click it and Unblock the Notifications