
10 ஆண்டுகள்
மூன்று அணிகள் தங்களுக்குள் ரவுண்ட் ராபின் அடிப்படையில் 2 முறை மோதிக் கொள்வார்கள். இதில் முதல் 2 இடம் பிடிக்கும் அணி இறுதிப் போட்டியில் மோதுவ்ர்கள். அந்த இறுதிப் போட்டி Best of 3 என்ற அடிப்படையில் நடைபெறும். இந்த முத்தரப்பு போட்டியை ஆஸ்திரேலியா கடந்த 10 ஆண்டுகளாக நடத்தவில்லை.

ஆஸி. திட்டம்
அதிகமாக போட்டிகள் நடைபெறுவதால், அணிகளை அழைத்து முத்தரப்பு தொடரை நடத்துவதை ஆஸ்திரேலியா நிறுத்தி கொண்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க முத்தரப்பு தொடரை ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. இதில் முதல் தொடரில் பாகிஸ்தான், இந்தியா அணிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டி
இதே போன்று முத்தரப்பு தொடருக்கு முன்பாக, இந்தியா, , பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் போட்டியில் மோதவும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனையும் ஆஸ்திரேலியாவிலேயே நடத்த அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது. சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தான் டி20 உலககோப்பை போட்டியில் மோதின.

காரணம் ஏன்?
மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தை சுமார் 90 ஆயிரம் ரசிகர்கள் கண்டு களித்தனர். இது அந்த மைதானத்தில் அதிக அளவு ரசிகர்களால் பார்க்கப்பட்ட 3வது கிரிக்கெட் போட்டியாகும். இதனால் அதிக வருமானம் கிடைக்கும் என்பதால் ஆஸ்திரேரியா இந்த முயற்சியை எடுத்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்தில், இந்தியா, பாக். போட்டியை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்ததை பிசிசிஐ நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











