
அடுத்த கேப்டன்
அடுத்த கேப்டனாக இருக்கும் பட்டியலில் முதன்மையில் இருப்பவர் டேவிட் வார்னரும், ஸ்மித்தும் தான். காரணம், ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் உள்ள வார்னர், சன்ரைசர்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்திருக்கிறார். இதனால் வார்னர் தான் சரியான தேர்வாக இருப்பார் என அனைவரும் நம்புகின்றனர். ஆனால், அதில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

சிக்கல்
Sand paper விவகாரத்தில் டேவிட் வார்னர் சிக்கியதால் அவர் கேப்டனாக செயல்பட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்துள்ளது. ஆனால், இதே போன்ற தடை ஸ்மித்துக்கு விதிக்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் நாளை நடைபெறும் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் வார்னர் மீதான தடையை விலக்கி, அவர் கேப்டனாக செயல்பட நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

சமாளிக்க முடிவு
டேவிட் வார்னர், மற்ற நாடுகளில் நடக்கும் டி20 தொடரில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், அவரை சமாளிக்க, கேப்டன் பொறுப்பை வழங்கி சமதானப்படுத்தும் முயற்சியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது. இதே போன்று இந்த 2 நாள் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

மற்ற விவகாரம்
தொலைக்காட்சிக்கான உரிமை ஒப்பந்தம், வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. ஆஸ்திரேலியாவின் அடுத்த கேப்டன் வார்னர் அல்லது ஸ்மித்தா என்ற கடும் போட்டி நிலவுகிறது.


Click it and Unblock the Notifications











