அடுத்த மாதம் முதல்.. இந்தியாவிற்கு வரிசைகட்டி வரும் ஆஸி., நியூசி., இலங்கை கிரிக்கெட் அணிகள்!
டெல்லி: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் அடுத்த செப்டம்பர் முதல் வரிசையாக இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளன.
இதுகுறித்த முதல்கட்ட கால அட்டவணை இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 11ம் தேதிவரை வரை இந்தியாவில் விளையாட உள்ளது.

அக்டோபர் 22 முதல் நவம்பர் 7 வரை நியூசிலாந்து அணி இந்தியாவில் ஆட உள்ளது. இதையடுத்து இலங்கை கிரிக்கெட் அணி நவம்பர் 15 முதல் டிசம்பர் 24 வரை இந்தியாவில் விளையாடுகிறது.
Story first published: Tuesday, August 1, 2017, 17:49 [IST]
Other articles published on Aug 1, 2017


Click it and Unblock the Notifications