
கடினமாக இல்லையே
அதன்பிறகு, இந்தியாவுக்கு வந்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி. இரு அணிகளும் மிகவும் வலுவான அணிகள் என்பதால், போட்டி மிகவும் கடினமாக இருக்கும். இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாகவே இருக்கும் என்று முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் எச்சரித்தனர்.

சென்னையில் அசத்தல்
சென்னையில் நடந்த முதல் ஒருதினப் போட்டியில் மழையால், ஆஸ்திரேலியாவுக்கு சற்று கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் வென்று 1-0 என, இந்தியா முன்னிலை பெற்றது. கோல்கட்டாவில் மழை பெய்து வந்ததால், போட்டி நடக்குமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில், 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்து துறைகளிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

புவனேஷ்வர் குமார் அசத்தல்
கேப்டன் விராட் கோஹ்லி, 92 ரன்கள், அஜிங்யா ரகானே 55 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் பெரிய அளவுக்கு சோபிக்கவில்லை. 253 ரன்களை சுலபமாக எடுத்துவிடலாம் என்று நினைத்த ஆஸ்திரேலியாவுக்கு புவனேஷ்குமார் முதலில் தடை போட்டார். ஹாட்ரிக் சாதனையாளர் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா, ஹார்திக் பாண்டியா என அனைவரும் சிறப்பாக பந்து வீசி, விக்கெட்களை வீழ்த்தினர்.

மெர்சல் வெற்றி
டேய் இந்த திறமைகளை எங்கடா ஒழிச்சி வைச்சிருந்தீங்க என்று ஸ்டீவ் ஸ்மித் அணி கேட்கும் அளவுக்கு நமது வீரர்கள் ஒட்டுமொத்தமாக காட்டிய திறையில் மெர்சலான ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. அடுத்தது இந்தூரில் 24ம் தேதி நடக்கும் போட்டியில் வென்றால் தொடரை வென்றுவிடலாம்.


Click it and Unblock the Notifications