போர்ட் எலிசபெத்:விதியை மீறி வெளிப்படையாக கருத்து தெரிவித்ததால் ஆஸ்திரேலிய வீரர் 'sbf'd வார்னருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது டெஸ்டின் போது பந்தை சேதப்படுத்தினர்.

இதையடுத்து விக்கெட் கீப்பர் டி வில்லியர்ஸ் ஒவ்வொரு முறை பந்தை பிடிக்கும் போதும் கையுறையில் பந்தை தேய்த்தார் என்று பகிரங்கமாக புகார் கூறினார் வார்னர். இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதத்தை அதாவது சுமார் ஒன்றே முக்கால் லட்சம் அபராதமாக விதித்துள்ளது.
சர்வதேச போட்டி குறித்து வெளிப்படையாக விமர்சனம் செய்வது விதிமீறல் என்பதன் அடிப்படையில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.