
டூபிளஸிஸ் குறித்து சேனல் 9 புகார்
தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளஸிஸ் பந்தை சுரண்டி சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய டிவியான சேனல் 9 புகார் கூறி ஒரு செய்தியை ஒளிபரப்பியது. இதுதான் தென் ஆப்பிரிக்காவை கொந்தளிக்க வைத்து விட்டது.

அணி மேலாளர் கோபம்
இந்த விவகாரம் குறித்து தென் ஆப்பிரிக்க அணி மேலாளர் டாக்டர் முகம்மது மூசாஜி கூறுகையில், ஆஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பாக சேனல் 9 ஆகியவை கடந்த சில நாட்களாக எங்களது அணி வீரர்களை குறி வைத்துத் தாக்கி வருகின்றன. தவறான செய்திகளைப் போடுகின்றன.

பேச விரும்பவில்லை
பந்தைச் சுரண்டியதாக கூறப்படுவது குறித்து கேப்டன் டூபிளஸிஸ் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியும் கூட சேனல் 9 தொடர்ந்து வற்புறுத்தி வருவது ஏன் என்று புரியவில்லை. சேனல் 9 செயல் எங்களுக்கு ஏமாற்றம் தருகிறது.

அடுத்தடுத்து தொந்தரவு செய்கிறார்கள்
இதுவரை 3 முறை ஆஸ்திரேலிய ஊடகங்கள் எங்களது வீரர்களை தொந்தரவு செய்துள்ளனர். இது தவறு, ஏற்க முடியாதது. மீடியா புரோட்டோகாலை ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் அவர்கள் தவறி வருகிறார்கள்.

விமான நிலையத்தில் அவமரியாதை
சேனல் 9 செய்தியாளர் அடிலைடு விமான நிலையத்தில் எங்களிடம் அவமரியாதையாக நடந்து கொண்டார். தொடர்ந்து டூபிளஸிஸிடம் கருத்து கேட்டு அவரைத் தொந்தரவு செய்தார். வீரர்களுக்கு மத்தியில் நடந்து போய் தொந்தரவு செய்தார். கையில் ஏதோ பொருளை வைத்துக் கொண்டு அவர் தொடர்ந்து வற்புறுத்தியபடி பேசியது பாதுகாப்பு விதிமீறல் ஆகும்.

முதுகில் தட்டினார்
மேலும் அணி மேலாளரின் முதுகிலும் அந்த செய்தியாளர் தட்டினார். இது அவமரியாதையான செயலாகும். இதேபோல திருப்பிச் செய்ய எங்களுக்கு நேரமாகாது. அந்த செய்தியாளரின் செயல் ஏற்க முடியாதது. தவறானது என்று முகம்மது கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











