
2வது டெஸ்ட் போட்டி
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த போட்டியில் தொடக்கமே சிறப்பாக அமைந்திருந்தது. முதல் நாளை 21 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி முடித்த இந்திய அணி 2வது நாளில் 45 ரன்கள் வரை எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லாமல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் அதன்பின்னர் தான் இந்தியாவுக்கு கண்டம் தொடங்கியது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 32 ரன்களுக்கும், கே.எல்.ராகுல் 17 ரன்களுக்கும் வெளியேறினர்.

சரிந்த மிடில் ஆர்டர்
இதன் பின்னர் வந்த நட்சத்திர வீரர்கள் சட்டீஸ்வர் புஜாரா (0), ஸ்ரேயாஸ் ஐயர் (4), ஸ்ரீகர் பரத் (6 ) என அடுத்தடுத்து வெளியேறினர். நம்பிக்கை கொடுக்கும் வகையில் விளையாடிய விராட் கோலி 44 ரன்களை அடித்து மிக வலுவாக இருந்த நிலையில் அம்பயரின் தவறான முடிவால் எல்.பி.டபள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் இந்திய அணி 139 ரன்களுக்கெல்லாம் 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

திடீர் ட்விஸ்ட்
124 ரன்கள் முன்னிலையுடன் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர் அக்ஷர் பட்டேல் - அஸ்வின் ஜோடி. 8வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த அவர்கள் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் பவுண்டரிகளை அடித்து பிரிக்க முடியாத பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் ஆஸ்திரேலிய பவுலர்கள் விழிப்பிதுங்கி நின்றனர்.

1 ரன் தான் முன்னிலை
இவர்கள் இருவரும் மட்டும் சேர்ந்து 114 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இதனால் இந்திய அணி அசால்ட்டாக 262 ரன்களை குவித்துவிட்டது. அதிக முன்னிலை பெற்றுவிட மாட்டோமா என்று நினைத்த ஆஸ்திரேலியாவுக்கு வெறும் 1 ரன் மட்டுமே முன்னிலை கிடைத்தது. சிறப்பாக விளையாடிய அக்ஷர் பட்டேல் 74 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 37 ரன்களையும் அடித்தனர்.


Click it and Unblock the Notifications