
2வது நாள் போட்டி
இதன் பின்னர் வந்த விராட் கோலி,சூர்யகுமார் யாதவ், புஜாரா, கே.எஸ்.பரத், அஸ்வின் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 240 ரன்களுக்கு 7 விக்கெட்கள் சென்றுவிட்டது. எனினும் அப்போது ஜோடி சேர்ந்த அக்ஷர் பட்டேல் - ரவீந்திர ஜடேஜா ஜோடி 81 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்து விளையாடி வருகின்றனர். 114 பந்துகளில் ஜடேஜாவும், 94 பந்துகளில் அக்ஷர் பட்டேலும் தங்களது அரைசதத்தை பூர்த்தி செய்தனர்.

அக்ஷர் விளக்கம்
இந்நிலையில் 2வது நாள் ஆட்டம் முடிந்த பிறகு பேசிய அக்ஷர் பட்டேல் சுவாரஸ்ய தகவல்களை கொடுத்துள்ளார். அதில், கடந்த ஒரு வருடமாகவே நான் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். அதனுடைய நம்பிக்கை எனக்கு பக்கபலமாய் இருக்கிறது. எனது டெக்னிக்கள் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். ஏனென்றால் கிடைக்கும் நேரங்களிலெல்லாம் நான் பேட்டிங்கிற்கான பயிற்சிகளை தொடர்ந்து செய்தேன். முடிந்தவரை என்னால் முடிந்த பங்களிப்பை கொடுப்பேன்.

பேட்டிங் சிக்கல்
எப்போதுமே பேட்டிங்கிற்கு செல்லும் போது பிட்ச்- குறித்த கவலையும், கடினமும் இருக்க தான் செய்யும். ஆனால் சிறிது நேரம் களத்தில் நின்ற பிறகு அவை காணாமல் போய்விடும். எனது கவனம் சிதறிவிடக்கூடாது என்பதற்காக ஜடேஜாவிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தேன்.
அதுதான் இந்த போட்டியில் நன்றாக பேட்டிங் செய்ய உதவியது என அக்ஷர் பட்டேல் கூறியுள்ளார்.

3வது நாள் கணிப்பு
தொடர்ந்து பவுலிங் குறித்து பேசிய அவர், 3வது நாளில் பிட்ச்-ன் தன்மை எப்படி இருக்கும் என கூறினார். அதில், நாளை நாங்கள் பேட்டிங் செய்யும் வரை பிட்ச் நன்றாக இருக்க வேண்டும். அதன்பின் பவுலிங் வீசும் போதும் எங்களுக்கு சாதகமாக மாறிவிட வேண்டும் என சிரித்துக்கொண்டே கூறினார். எனினும் அக்ஷர் கூறியதை போல 3வது நாளில் இன்னும் பந்தில் ஸ்பின் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications











