
ஷாஹித் அப்ரிடி நிறுவனம்
ஷாஹித் அப்ரிடி பாகிஸ்தானில் முக்கியமான தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலம் கிரிக்கெட் போட்டிகள் நடத்தி அதன் மூலம் வரும் வருவாயை சில நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று 'எஸ்ஏஎப் ரெட்' மற்றும் 'எஸ்ஏஎப் கிரீன்' என்ற இரு அணிகள் 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடின.
ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ்
இந்த போட்டியில் எஸ்ஏஎப் ரெட் அணியை சேர்ந்த சோயப் மாலிக் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்தார். பாகிஸ்தானின் முன்னணி வீரரான பாபர் அசாம் ஓவரில் அவர் இந்த சாதனையை செய்தார். இதன் மூலம் எஸ்ஏஎப் ரெட் அணி 10 ஓவரில் 210 ரன்கள் என்று இமாலய ரன்னை எடுத்தது.
பழி வாங்கினார்
211 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய எஸ்ஏஎப் கிரீன் அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடியது. ஆறு சிக்ஸ் கொடுத்த கோபத்தில் இருந்த அசாம் 26 பந்துகளில் செஞ்சுரி அடித்தார். 11 சிக்ஸ்களும், 7 பவுண்டரிகளும் இதில் அடக்கம். இவரின் அதிரடியான ஆட்டத்தால் எஸ்ஏஎப் கிரீன் அணி அபாரமாக வென்றது.

அடுத்த கோஹ்லியா
பார்ப்பதற்கு கோஹ்லி போலவே இருக்கும் இவர் விளையாடுவதும் கோஹ்லி போலத்தான் இருக்கும். இதனால் இவரை பலரும் கோஹ்லி என்ற அழைத்து வருகின்றனர். அதற்கு இவர் ''நான் கோஹ்லி இல்லை, அவர் மிகவும் சிறந்த வீரர். கிரிக்கெட் உலகில் இப்போது அவர் நம்பர் ஒன் வீரர்'' என்று குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











