மிர்பூர் : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தது அந்த அணியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் பலரும் வங்கதேச அணியை கடுமையாக சாடி இருந்தார்கள்.
இந்த நிலையில் வங்கதேச அணி நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியை கைப்பற்ற வேண்டிய உத்வேகத்தில் களமிறங்கியது.
