துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் இலங்கை, வங்கதேச அணிகள் மோதி வருகின்றன.
ஆறு நாடுகள் பங்கேற்கும் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் போட்டியாக இலங்கை, வங்கதேச போட்டி அமைந்துள்ளது. இரண்டு அணிகளிலும் காயம் காரணமாக பல முக்கிய வீரர்கள் இடம் பெறாத நிலையில், யார் வெற்றியோடு தொடரை துவக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் மஷ்ராபே மொர்டாசா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். முதலில் பேட் செய்ய வந்த வங்கதேச அணி பேட்டிங்கில் தடுமாறி வருகிறது.
இலங்கை அணி துவக்கத்தில் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மலிங்கா பந்துவீச்சில் லிட்டன் தாஸ் மற்றும் சாகிப் அல் ஹசன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளனர்.
வங்கதேச அணியின் துவக்க வீரர் தமிம் இக்பால் காயம் காரணமாக 2 ரன்கள் இருக்கும் போது வெளியேறி உள்ளார்.
வங்கதேசம் இப்போது 16-2 என மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. முஷ்பிகுர் ரஹீம் மற்றும் முஹம்மத் மிதுன் ஆடி வருகின்றனர். மலிங்க இரண்டு விக்கெட்கள் வீழ்த்தி அச்சுறுத்தி வருகிறார்.