
தீபிகாவின் குமுறல்....
விளையாட்டில் பெண்களுக்குப் பாரபட்சம்
விளையாட்டில் பெண்களுக்குப் பாரபட்சம் இழைக்கப்படுவது உண்மைதான்.

என் தாயாருக்கு நேர்ந்த அவமரியாதை
எனது தாயார் இந்திய மகளிர் அணி கிரிக்கெட் கேப்டனாக இருந்தவர். அவர் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு அணியுடன் பயணித்தபோது என்ன நடந்தது தெரியுமா... 15 பேர் கொண்ட அணியினருக்கு ஒரே அறைதான் கொடுத்துள்ளனர். அனைவரையும் ஒரே அறையில் தங்க வைத்துள்ளனர்.

யாரையுமே எனக்குப் பிடிக்கலை
திணேஷ் கார்த்திக்கைத் தவிர அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் நான் வெறுக்கிறேன்.

புகழைத் திருடுகிறார்கள்
மற்ற விளையாட்டுக்களின் புகழையும், பெருமைகளையும், கெளரவத்தையும் கிரிக்கெட் வீரர்கள் திருடி விடுகிறார்கள்.

டிஏ- டிஏ இன்னும் வரவே இல்லை
காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டதற்காக எங்களுக்குத் தரப்பட வேண்டிய போக்குவரத்து படி மற்றும் டிஏ படியில் பாதியை இன்னும் இந்திய ஒலிம்பிக் சங்கம் எனக்குத் தரவில்லை.

பயிற்சிக்கு இடமில்லை
இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டுக்கான சரியான பயிற்சி இடம் இல்லை. இதற்காக நான் எகிப்து வரை போக நேரிட்டது.

14 வயதில் கஷ்டப்பட்டேன்
14 வயதில் நான் எகிப்துக்குப் போய் தனியாக தங்க நேரிட்டது. அதை நான் வெறுத்தேன். ஆனால் நான் என்னை நிரூபிக்க வெறியோடு இருந்தேன். தீவிரமாக பயிற்சி எடுத்தேன். அதுதான் என்னை உறுதியாக்கியது. வலிமைப்படுத்தியது. இன்றைய சாதனைகளுக்கு அதுதான் முக்கிய அஸ்திவாரமாக அமைந்தது.

நாட்டுக்காக விளையாடுவதே பெருமை
நாட்டுக்காக நான் விளையாடுகிறேன். அதை விட எனக்கு வேறு பெருமை இல்லை, தேவையும் இல்லை. அந்த உணர்வே போதுமானது என்றார் தீபிகா.


Click it and Unblock the Notifications











