
இந்திய போட்டிகள்
3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 25ம் தேதியுடன் முடிவு பெறுகிறது. இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணியுடன் செப்.28 முதல் அக்டோபர் 4ம் தேதி வரையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளது. இது முடிந்தவுடன் அக்டோபர் 11ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவதாக திட்டமிட்டிருந்தனர்.

டிராவிட்டின் கோரிக்கை
ஆனால் அக்டோபர் 5ம் தேதியன்றே புறப்பட வேண்டும் என டிராவிட் முக்கிய கோரிக்கையை வைத்தார். அதாவது ஐசிசி சார்பில் இரண்டு பயிற்சி போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதனை தவிர மேலும் 3 பயிற்சி போட்டிகளை இந்திய அணிக்குள்ளேயாவது நடத்த வேண்டும். அதற்காக ஆஸ்திரேலியாவுக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும் எனக்கேட்டிருந்தார். இதே போல குறிப்பாக பெர்த் மைதானம் தான் பயிற்சிக்கு வேண்டும் எனவும் கேட்டிருந்தார்.

என்ன காரணம்
ஆஸ்திரேலியாவில் பெர்த் மைதானத்தின் பிட்ச்-ல் தான் அதிக வேகமும், பவுன்ஸும் இருக்கும் எனக்கூறப்படுகிறது. எனவே அங்கு நல்ல பயிற்சியை பெற்றிவிட்டால், பின்னர் மற்ற மைதானங்களில் சமாளித்துவிடலாம். எனவே அதனை மனதில் வைத்துதான் டிராவிட் கேட்டார். இதே போல பேக் -அப் வீரர்களையும் கையுடன் அழைத்து செல்வதற்கும் அனுமதி வாங்கியிருந்தார்.

பிசிசிஐ பச்சைக்கொடி
இந்நிலையில் டிராவிட்டின் கோரிக்கைக்கு பிசிசிஐ பச்சைக்கொடி காட்டியுள்ளது. அதாவது அவர் கேட்டபடி பெர்த் மைதானம் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல தென்னாப்பிரிக்க தொடர் முடிந்த அடுத்த தினமே வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications











