மகளிர் உலகக்கோப்பை
இந்நிலையில், இந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு மிதாலி ராஜ் கேப்டனாகவும், ஹர்மன்ப்ரீத் கவுர் துணைக்கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேக்னா ஷிங், ரேணுகா சிங், போன்ற வீராங்கனைகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னணி வீராங்கனைகள்
எனினும் அணியின் முன்னணி வீராங்கனைகளாக இருந்த ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றும் ஷிகா பாண்டே ஆகியோருக்கு உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. சீனியர்கள் மற்றும் இளம் வீராங்கனைகள் கொண்ட கலவையாக உருவாக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான்
இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன. அதைத் தொடர்ந்து மார்ச் 5ம் தேதி நடப்பு சாம்பியனான இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. இதைத் தொடர்ந்து மார்ச் 6-ம் தேதி டவுராங்காவில் நடைபெறும் போட்டியில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. முதல் போட்டியே பாகிஸ்தானுடன் நடப்பதால் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
நியூசி, சுற்றுப்பயணம்
இதற்கு தயாராகும் நோக்கில் உலகக்கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்துடன், ஒரு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய மகளிர் அணி மோதுகிறது. இதிலும் மிதாலி ராஜ் தலைமையிலான அணி தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி பயிற்சிக்கு தயாராகிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.