For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய மகளிர் அணிக்கு மெகா ஜாக்பாட்.. உலகக்கோப்பையை வென்றால் ரூ.125 கோடி பரிசு.. பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: இந்திய அணி 2025 ஐசிசி ஒருநாள் போட்டி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஒரு பிரம்மாண்டமான பரிசை முடிவு செய்து இருக்கிறது. இன்று நடைபெறும் மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி கோப்பையை வென்றால், வீராங்கனைகளுக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு, இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய அங்கீகாரமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய மகளிர் அணி 2025 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையை வெல்லும் பட்சத்தில், ஆண்கள் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகைக்கு இணையான தொகையை வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. முன்னதாக, ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்குப் போட்டி ஊதியத்தில் சம ஊதியத்தை பிசிசிஐ நடைமுறைப்படுத்தியிருந்தது. தற்போது, செயல்திறன் அடிப்படையிலான வெகுமதிகளிலும் அதே கொள்கையைப் பின்பற்றும் இந்த முடிவு, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

BCCI Announces Massive 125 Crore Prize Money for Indian Women s Team if They Win World Cup Final

இதுகுறித்து பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆண்கள் மற்றும் பெண்களுக்குச் சம ஊதியத்தை பிசிசிஐ முழுமையாக ஆதரிக்கிறது. எனவே, நமது வீராங்கனைகள் உலகக்கோப்பையை வென்றால், அவர்களுக்கான பரிசுத்தொகை, ஆண்கள் அணி உலகக்கோப்பையை வென்றபோது வழங்கப்பட்ட பரிசுக்கு எந்த வகையிலும் குறைவாக இருக்கக்கூடாது என்ற விவாதம் நடைபெற்று வருகிறது" என்றார்.

கடந்த 2024ஆம் ஆண்டு, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய ஆண்கள் அணி டி20 உலகக்கோப்பையை வென்றபோது, வீரர்கள் மற்றும் துணை ஊழியர்கள் உட்பட முழு அணிக்கும் பிசிசிஐ ரூ.125 கோடியை ஊக்கத்தொகையாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோன்ற ஒரு மாபெரும் பரிசை மகளிர் அணிக்கும் வழங்குவது, அவர்களது வெற்றிக்கும், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்கும் இதுவரை இல்லாத மிகப்பெரிய அங்கீகாரமாக அமையும்.

மகளிர் கிரிக்கெட்டின் அபார வளர்ச்சி

இந்த அறிவிப்பு, கடந்த சில ஆண்டுகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அடைந்துள்ள அபரிமிதமான வளர்ச்சியையே காட்டுகிறது. 2017ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்தத் தோல்வி பெரும் சோகத்தை அளித்தாலும், ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

எட்டு ஆண்டுகள் கழித்து, இன்று பரிசுகளும், எதிர்பார்ப்புகளும் பன்மடங்கு உயர்ந்துள்ளன. இந்த முறை இந்திய மகளிர் அணி ஒருபடி மேலே சென்று கோப்பையை வென்றால், ஒவ்வொரு வீராங்கனைக்குமான பரிசுத்தொகை பத்து மடங்கு வரை உயரக்கூடும். இறுதிப் போட்டியில் களமிறங்கும் இந்திய வீராங்கனைகளுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Sunday, November 2, 2025, 10:03 [IST]
Other articles published on Nov 2, 2025
English summary
BCCI Announces Massive ₹125 Crore Prize Money for Indian Women's Team if They Win World Cup Final
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+