
அடுக்கடுக்கான புகார்
விராட் கோலியிடம் தகவலை தெரிவிக்காமல், ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் ஒரே ஆண்டில் 7 கேப்டன்களை மாற்றியது, பும்ராவை உடல் தகுதி அல்லாமல் டி20 உலககோப்பை தொடருக்கு முன்பு விளையாட வைத்தது போன்ற பல விமர்சனங்களில் சேத்தன் சர்மா சிக்கினார். இதே போன்று விருத்திமான் சாஹாவை அணியிலிருந்து நீக்கிவிட்டு, ஓய்வு பெறுங்கள் என கூறியது, பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு தராமல் இழுத்து அடித்தது என்று பல புகார்கள் சேத்தன் சர்மா மீது எழுந்துள்ளது .

அதிரடி நீக்கம்
இதன் காரணமாக சேத்தன் சர்மா குழுவை கடந்த நவம்பர் மாதம் பிசிசிஐ அதிரடியாக நீக்கியது இதனைத் தொடர்ந்து புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு சுமார் 600 பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். இதில் பிசிசிஐயின் ஆலோசனை குழு 11 பேரை தேர்வு செய்து நேர்முகத் தேர்வு நடத்தியது.

புதிய உறுப்பினர்கள்
இதில் சுமார் 2 வாரத்திற்கு பிறகு தற்போது சேத்தன் சர்மாவையே மீண்டும் பிசிசிஐ தேதர்வுக்குழு தலைவராக நியமிக்க, ஆலோசனை குழு முடிவு எடுத்தது. அதன் பேரில் தற்போது பிசிசிஐ அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இதில் சிவ் சுந்தர், சுபராட்டோ பெனர்ஜி,சலில் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீதரன் சரத்
இதில் ஸ்ரீதரன் சரத் , தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் என்பது கூடுதல் தகவல். 100 ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடிய ஒரே தமிழக வீரர் என்ற பெருமையை அவர் பெற்று இருக்கிறார். 52 வயதான ஸ்ரீதரன் சரத் தற்போது தென் மண்டல தேர்வுக்குழு உறுப்பினராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே அண்டர் 19 அணியை தேர்வு செய்யும் குழுவில் இருந்தவர்.


Click it and Unblock the Notifications











