
டெல்லி : நிதிப் பற்றாக்குறையால் தவித்து வந்த வடகிழக்கு மாநில கிரிக்கெட் அமைப்புகளின், ரஞ்சி ட்ராபி தொடர் செலவுகளை ஏற்பதாக உத்தரவாதம் அளித்துள்ளது பிசிசிஐ.
செய்வதறியாது தவித்து வந்த வடகிழக்கு மாநில அணிகள், இதனால் உற்சாகமடைந்துள்ளன. இதனையடுத்து, ரஞ்சி ட்ராபி தொடருக்கு தங்கள் அணிகளை தயார் செய்யும் வேலைகளை தொடங்குவார்கள் என தெரிகிறது.
