ஐசிசி தலைவர்
அந்த நபர் முன்னாள் பிசிசிஐ தலைவரும், தற்போதைய ஐசிசி தலைவருமான ஷஷான்க் மனோகர். அவர் ஐசிசி தலைவர் ஆனது முதல் பிசிசிஐக்கு எதிராக காய் நகர்த்தி வருவதாக ஒரு குற்றசாட்டு உள்ளது. ஆனால், பிசிசிஐ எப்போதும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக பேசியதில்லை.
டி20 உலகக்கோப்பை
பிசிசிஐயில் இருக்கும் லாபிக்களின் அதிகார மோதலின் ஒரு பகுதிதான் இது. ஐசிசி தலைவராக இருக்கும் ஷஷான்க் மனோகரின் பதவிக் காலம் இன்னும் சில வாரங்களில் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக டி20 உலகக்கோப்பை பற்றிய முக்கிய முடிவை எடுக்க வேண்டியது உள்ளது.
விரும்பவில்லை
2020 டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அந்த தொடரை நடத்துவதில் பல சிக்கல்கள் உள்ளது. தொடரை நடத்த வேண்டிய ஆஸ்திரேலியா தாங்கள் தொடரை நடத்த விரும்பவில்லை என்றே கூறி விட்டது.
இரண்டு கூட்டங்கள்
இந்த நிலையில், 2020 உலகக்கோப்பை தொடரை தள்ளி வைப்பது தான் ஒரே முடிவு. ஆனால், அதை ஐசிசி அறிவிக்காமல் நாட்களை கடத்தி வருகிறது. இதுவரை இது தொடர்பாக விவாதம் செய்ய இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டது.
குற்றம் சுமத்திய அதிகாரி
ஆனால், அந்த இரண்டு கூடங்களிலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவே கூறிய பின்பும் டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கும் அறிவிப்பை வெளியிடாமல் இருப்பது, ஐபிஎல் தொடருக்கு சிக்கல் உருவாக்கத்தான் என பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி குற்றம் சுமத்தி உள்ளார்.
ஐபிஎல் திட்டம்
டி20 உலகக்கோப்பை நடக்காத பட்சத்தில் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்ய விடாமல் குழப்பத்தை ஏற்படுத்தவே ஐசிசி இவ்வாறு செய்வதாக கருதப்படுகிறது.
எல்லோருக்கும் பாதிப்பு
ஐசிசி டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கும் முடிவை அறிவிக்காமல் இருப்பது ஐபிஎல் தொடரை மட்டுமல்ல, மற்ற அணிகளின் இருதரப்பு தொடருக்கான திட்டங்களையும் பாதிப்பதாக அந்த பிசிசிஐ அதிகாரி கூறி உள்ளார். ஐசிசி-யே கிரிக்கெட்டுக்கு குழி பறிப்பது போலத்தான் உள்ளது இது.