For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிசிசிஐக்கு வேற வழியில்லை, அதனால்தான் கோஹ்லி கேப்டனாகியிருக்கிறார்... "அடடே" வடேகர்!

மும்பை: கேப்டன் டோணி தனது ஓய்வு முடிவை மறு பரிசீலனை செய்திருக்க வேண்டும். அவர் தொடர்ந்து டெஸ்ட் கேப்டனாக நீடித்திருக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் அணிக்கு வேறு வழி தெரியாமல்தான் கோஹ்லி கேப்டனாகும் நிலை ஏற்பட்டதாக முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் கூறியுள்ளார்.

ஒரு கிரிக்கெட் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் வடேகர். வேறு வாய்ப்பே இல்லாத காரணத்தால்தான் கோஹ்லியைப் பிடித்து கேப்டனாக்கியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம் என்றும் வடேகர் கூறியுள்ளார்.

டோணி இன்னும் சில காலத்துக்கு கேப்டனாக நீடித்திருக்கலாம் என்றும் அவர் தனது ஓய்வு முடிவை மறு பரிசீலனை செய்திருக்க வேண்டும் என்றும் வடேகர் கூறியுள்ளார்.

வடேகரின் பேட்டியிலிருந்து...

வங்கதேசத்தை சாதாரணமாக நினைத்தது தவறு

வங்கதேசத்தை சாதாரணமாக நினைத்தது தவறு

நமது வீரர்கள் வங்கதேச அணியை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டார்கள். ஒரு நாள் போட்டிக்கு முன்னதாக அவர்கள் சரிவர ஆயத்தமாகவில்லை. போட்டிக்கான பதட்டமே அவர்களிடம் இல்லை. தயார் நிலையிலும் இல்லை.

இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்

இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்

பரவாயில்லை, அது முடிந்த கதை. இப்போது இளம் வீரர்கள் கொண்ட அணியை ஜிம்பாப்வேக்கு அனுப்புகிறார்கள். இது பாராட்டுக்குரியது. இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு கிடைக்க வேண்டும். இப்போது அவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ரஹானே நல்லவர் வல்லவர்

ரஹானே நல்லவர் வல்லவர்

ரஹானே கேப்டனாகியுள்ளார். அவர் இளைஞர், திறமையானவர், அமைதியானவர். சிறப்பாக செயல்பட அவருக்கு வாழ்த்துகிறேன். ஜிம்பாப்வே டூர் அவருக்கு நல்லபடியாக அமையும் என நம்புகிறேன்.

ஏன் நீக்கினார் டோணி

ஏன் நீக்கினார் டோணி

வங்கதேச டூரில் கடைசி இரு ஒரு நாள் போட்டிகளில் ரஹானே நீக்கப்பட்டார். என்ன காரணத்திற்காக அவர் நீக்கப்பட்டார் என்பது தெரியவில்லை. புதிய முயற்சிக்காக ரஹானேவை நீக்கியிருக்கலாம். அவர் நல்ல வீரர். நீண்ட காலத்திற்கு இந்தியாவுக்காக ஆடுவார்.

"பஜ்ஜி" நல்ல தேர்வுதான்

ஹர்பஜன் சிங் ஐபிஎல் போட்டிகளில் ஆடியதைப் பார்த்து அவரை அணிக்குத் தேர்வு செய்துள்ளனர். இது நல்லதுதான். ஐபிஎல் அடிப்படையில் ஒரு நாள் போட்டிக்கு வந்துள்ளார் ஹர்பஜன் சிங். அவர் அணியில் இருப்பது இளைஞர்களுக்கு உத்வேகம் தரும். அஸ்வின் அணிக்கு வந்தாலும் வராவிட்டாலும் ஹர்பஜனும் நீடிக்க வேண்டும்.

2 கேப்டன்கள் நல்லதா, கெட்டதா

2 கேப்டன்கள் நல்லதா, கெட்டதா

இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது. டோணி பதவி விலகியதால் வேறு வழியில்லாமல் இன்னொரு கேப்டனாக கோஹ்லி வந்துள்ளார். பிசிசிஐக்கு வேறு வழி தெரியவில்லை. டோணி இருந்திருந்தால் கோஹ்லி வந்திருக்க மாட்டார். இந்தியாவுக்கு 2 கேப்டன்கள் தேவை இல்லை.

டோணி மறுபரிசீலனை செய்திருக்கலாம்

டோணி மறுபரிசீலனை செய்திருக்கலாம்

டெஸ்ட் போட்டிகளிலிரு்து விலகும் முடிவை டோணி மறு பரிசீலனை செய்திருக்க வேண்டும். இன்னும் சில காலம் அவர் விளையாடியிருக்கலாம். அவர் போனதால்தான் கோஹ்லியைக் கேப்டனாக்கியுள்ளனர் என்றார் வடேகர்.

Story first published: Wednesday, July 8, 2015, 14:37 [IST]
Other articles published on Jul 8, 2015
English summary
BCCI had no choice other than Kohli after DHoni quit his job as Test captain, said former captain Ajith Wadekar.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+