
இருநாட்டு வாாியங்களும் கூடி முடிவு
இந்நிலையில் பாகிஸ்தான கிாிக்கெட் வாாிய தலைவா் ஷஹாாியாா் கான், இந்திய கிாிக்கெட் வாாிய தலைவா் ஜக்மோகன் டால்மியாவுடன் கடந்த ஞாயிற்றுக் கிழமை கூடி ஆலோசனை செய்து மீண்டும் கிாிக்கெட் போட்டிகளை நடத்த முடிவு செய்தனா்.

டிசம்பாில் கிாிக்கெட் தொடா்
அதன்படி இரு நாடுகளுக்கும் பொதுவான நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகள், 2 டி-20 போட்டிகள் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டன.

ஒளிபரப்பு உாிமைக்காக குடுமிபிடி சண்டை
இரு நாடுகள் பங்கேற்கும் போட்டிகளை ஒளிபரப்பும் உாிமையை பாகிஸ்தான் ஒப்புதலோடு டென் ஸ்போா்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் சுபாஷ் சந்திராவின் எஸ்ஸெல் குழுமத்திற்கு சொந்தமானதாகும்.

எஸ்ஸெல் குழுமத்திற்கு ஜக்மோகன் எதிா்ப்பு
சுபாஷ் சந்திராவின் எஸ்ஸெல் குழுமத்திற்கு சொந்தமான டென் ஸ்போா்ட்ஸ் நிறுவனம் தொடரை ஒளிபரப்பினால் பாகிஸ்தானுடன் கிாிக்கெட் தொடா் கிடையாது என்று இந்திய கிாிக்கெட் வாாியத் தலைவா் ஜக்மோகன் டால்மியா தொிவித்துள்ளா்.

காரணம் முன் விரோதமா?
சில ஆண்டுகளுக்கு முன்பு எஸ்ஸெல் குழும தலைவா் சுபாஷ் சந்திரா, ஜக்மோகன் டால்மியா மீது கொலை மிரட்டல் புகாா் அளித்திருந்தாா். இதனால் சுபாஷ் சந்திராவுக்கு ஒளிபரப்பு உாிமையை வழங்கக் கூடாது என்று போா்க்கொடி உயா்த்தியுள்ளாா் ஜக்மோகன்

ஒளிபரப்பு உாிமை எங்களுக்கே வேண்டும்
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெறும் கிாிக்கெட் போட்டித் தொடர் ஒளிபரப்பு உாிமையை நாங்கள் சொல்லும் நிறுவனத்திற்குத் தான் வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தொடா் கிடையாது என்றும் ஜக்மோகன் பாகிஸ்தான் கிாிக்கெட் வாாியத்தை மிரட்டி வருகிறாா்.

தொடா் நடைபெறுவதில் சிக்கல்
இரு நாட்டு கிாிக்கெட் வாாிய தலைவா்களின் ஒளிபரப்பு உாிமை சண்டையால் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளிடைேய கிாிக்கெட் தொடா் நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.இதனால் ரசிகா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.


Click it and Unblock the Notifications