
தரம்சலா குழப்பம்
Dharamshala fiasco என்ற பெயரில் தி நேஷன் எழுதியுள்ள தலையங்கத்தில், உலகெங்கும் உள்ள ரசிகர்கள் தரம்சலாவில் நடக்கவிருந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியைக் காண பெரும் ஆர்வமாக இருந்தனர்.

பாதுகாப்புத் தர முடியாத இ.பி.
ஆனால் இமாச்சலப் பிரதேச அரசு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறி விட்டதால் அந்தப் போட்டியை அங்கு நடத்த முடியாமல் போய் விட்டது. தற்போது கொல்கத்தாவுக்குப் போட்டி மாறியுள்ளது.

மாற்று ஏற்பாடு செய்யுங்கள்
தற்போது தரம்சலா போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்து விட்ட பாகிஸ்தான் ரசிகர்கள் கொல்கத்தாவுக்குப் போக வேண்டியுள்ளது. அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டியது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கடமையாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸுக்கு கண்டனம்
இந்தத் தலையங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்பு தர முடியாது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ரசிங் கூறியதற்குப் பிறகும், மதச்சார்பற்றதாக தன்னைக கூறிக் கொள்ளும் காங்கிரஸ் அதில் தலையிடாமல் அமைதி காத்தது ஆச்சரியமாக இருப்பதாக அது கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications











