
ஊதிய விவரம்
இந்த நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்தை பி.சி.சி.ஐ. தயாரித்துள்ளது. அதன் படி , ஏ பிளஸ் பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு 7 கோடி ரூபாயும், ஏ பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு 5 கோடி ரூபாயும், பி பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு 3 கோடி ரூபாயும், சி பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு 1 கோடி ரூபாயும் வழங்கப்படும்,

ராகுல், பண்ட்க்கு லக்
இதில் ஏ பிளஸ் பிரிவில் தற்போது விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். தற்போது இந்த பட்டியலில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுலுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது.

சம்பளம் குறைப்பு
இந்த நிலையில், சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வரும் ரஹோனே, புஜாரா மற்றும் இஷாந்த் சர்மாவை ஏ பிரிவிலிருந்து பி பிரிவுக்கு மாற்றி சம்பளத்தை 5 கோடியிலிருந்து, மூன்று கோடி ரூபாயாக பி.சி.சி.ஐ. குறைக்க உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் ரஹானேவின் சராசரி 20 ஆகும், புஜாராவின் சராசரி 27ஆகவும் உள்ளது. இதனால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய ஒப்பந்தம்
ஜடேஜா, அஸ்வின், முகமது ஷமி ஆகியோர் தொடர்ந்து ஏ பிரிவில் நீடித்து 5 கோடியை சம்பளமாக பெற உள்ளனர். இதே போன்று சி பிரிவில் இடம்பெற்றுள்ள அக்சர் பட்டேல், முகமது சிராஜ் ஆகியோரின் ஊதியம் ஒரு கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாக உயர உள்ளது. வெங்கடேஷ் ஐயர், ஹர்சல் பட்டேல், ருத்துராஜ், ஷாரூக்கான், ரவி பிஸ்னாய் ஆகியோருக்கு ஒரு கோடி ரூபாய் ஒப்பந்தம் புதியதாக வழங்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications











