
தென்கொரியாவில் அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியை கிரிக்கெட் வாரியம் அனுப்ப வில்லை.
இது குறித்து ஆசியாவுக்கான ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவர் ஷேக் அல்-சபா கூறியுள்ளதாவது:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி, இரண்டாவது முறையாக அனுப்பப்படவில்லை. அவர்களது முடிவுக்கு நான் மதிப்பளிக்கிறேன்.
ஆனால், இது குறித்து கூறுவதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். பிசிசிஐ, விளையாட்டை ஊக்குவிப்பதற்கு மாறாக, கிரிக்கெட்டை வெறும் வணிகமாகவே பார்க்கிறது. இதை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியை ஒரு குழந்தை போல, பிசிசிஐ தங்களது நெஞ்சோடு அணைத்து வைத்துக் கொண்டிருக்கிறது. எந்த குழந்தையும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதை பிசிசிஐ நினைவில் கொள்ளவேண்டும்.
இவ்வாறு ஷேக் அல்-சபா கூறியுள்ளார்.