For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"ஆரம்பக்கிலாங்கலா" டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட கங்குலி

மும்பை: வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை பிசிசிஐ தலைவர் கங்குலி வெளியிட்டுள்ளார்.

இந்திய அணி உலகக் கோப்பையை வென்று 11 ஆண்டுகளாpகறது. டி20 உலகக் கோப்பை வென்று 15 ஆண்டுகளாகிறது.

Recommended Video

Dinesh Karthik T20 உலக கோப்பை வாய்ப்பு? Dravid பலே திட்டம்! | *cricket

ஐசிசி கோப்பையை கடைசியாக வென்றது 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தான். இதனால் இம்முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது.

தினேஷ் கார்த்திக்கிற்கு மதுரையில் நிகழ்ந்த அதிசயம்..! இந்திய அணிக்கு திரும்பியதன் பின்னணி!!தினேஷ் கார்த்திக்கிற்கு மதுரையில் நிகழ்ந்த அதிசயம்..! இந்திய அணிக்கு திரும்பியதன் பின்னணி!!

டி20 உலககோப்பை

டி20 உலககோப்பை

கடந்த டி20 உலககோப்பையில் பாகிஸ்தானிடம் முதல் முறையாக தோல்வி, லீக் சுற்றிலேயே வெளியேற்றம் போன்ற அவமானங்களை இந்திய அணி சந்தித்துள்ளது. தற்போது புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என அனைத்திலும் புதுமையை பிசிசிஐ புகுத்தியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

ஏன் வாய்ப்பில்லை

ஏன் வாய்ப்பில்லை

இதற்கான இந்திய அணியை தயாரிக்கும் பணியை ராகுல் டிராவிட், ரோகித் சர்மா கூட்டணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. அதன் படி, தற்போது சீனியர்களுக்கு ஓய்வு அளித்துவிட்டு, பிற வீரர்களை வைத்து தென்னாப்பிரிக்காவுடன் டி20 தொடரில் இந்தியா மோதுகிறது. ஆனால் இந்த தொடரில் ஐபிஎலில் கலக்கிய உம்ரான் மாலிக், ஆர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

கங்குலி அப்டேட்

கங்குலி அப்டேட்

ஒரே வீரர்களை வைத்து தான் தற்போது வரை 4 போட்டியிலும் இந்தியா விளையாடி இருக்கிறது. இதனால் உரகக் கோப்பைக்கான அணியை தயாரிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட போகும் வீரர்களுக்கு வரும் இங்கிலாந்து தொடர் மூலம் வாய்ப்பு அளிக்கப்படும்.

பின்னணி இது தான்

பின்னணி இது தான்

டிராவிட்டை பொறுத்தவரை 11 வீரர்களை தேர்வு செய்துவிட்டார். தற்போது அவர்களுக்கு பல்வேறு போட்டிகளில் விளையாட தொடர்ந்து வாய்ப்பு தருவார். இதன் மூலம் 11 வீரர்களுக்கும் தாங்கள் என்ன செய்ய வேண்டும், நெருக்கடியை எப்படி சமாளிக்க முடியும் என்பது குறித்து தெரியும். என்று அவர் கூறினார். இங்கிலாந்து டி20 தொடரில் கோலி,ரோகித், பும்ரா , ஜடே% ஆகியோர் திரும்பினால், மற்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, June 18, 2022, 19:52 [IST]
Other articles published on Jun 18, 2022
English summary
BCCI President Ganguly on Playing xi for Indian team in ICC T20 World cup" டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட கங்குலி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X