Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“விராட் கோலிக்கு அது அவசியமே கிடையாது”.. பாகிஸ்தான் உடனான இன்னிங்ஸ்.. ரோஜர் பின்னி ஓபன் டாக்!

பெர்த்: இந்திய அணி வீரர் விராட் கோலியின் கம்பேக் குறித்து பிசிசிஐ-ன் புதிய தலைவர் ரோஜர் பின்னி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொட்டதெல்லாம் சிக்ஸர் என்ற வகையில் அசுர பலத்தில் பயணித்து வருகிறது. முதல் 2 போட்டிகளிலுமே அபார வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றியும், நெதர்லாந்து போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் வகித்து வருகிறது.

கோலி இன்னிங்ஸ்

கோலி இன்னிங்ஸ்

இந்திய அணியின் இந்த அபார வெற்றிகளுக்கு முக்கிய தூணாக இருந்துள்ளவர் விராட் கோலி தான். 2 ஆண்டுகளுக்கு பின் கம்பேக் கொடுத்துள்ள அவர், பாகிஸ்தான் போட்டியில் டாப் ஆர்டர் சரிந்த போது ஒன்றை ஆளாக போராடி 53 பந்துகளில் 83 ரன்கள் அடித்து உதவினார். குறிப்பாக ஹாரிஸ் ராஃப் வீசிய ஓவரில் அவர் அடித்த ஸ்ட்ரைக் சிக்ஸர் ரசிகர்களை இன்று வரை வியப்பிலேயே வைத்துள்ளது. இதே போல நெதர்லாந்து போட்டியில் அரைசதம் அடித்திருந்தார்.

பிசிசிஐ தலைவர் பேச்சு

பிசிசிஐ தலைவர் பேச்சு

இந்நிலையில் கோலியின் இந்த இன்னிங்ஸ் குறித்து பிசிசிஐ புதிய தலைவர் ரோஜர் பின்னி புகழ்ந்து பேசியுள்ளார். அதில், இதுபோன்ற போட்டியை காண வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது. கோலி அந்த பந்தை சிக்ஸர் அடித்த விதம் இன்னும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. பாகிஸ்தானுக்கு சாதகமாக சென்று, கடைசி நேரத்தில் இந்தியாவின் பக்கம் வெற்றி வருவதை அடிக்கடி நம்மால் காண முடியாது.

அவசியமே கிடையாது

அவசியமே கிடையாது

விராட் கோலி யாருக்காகவும் அவரை நிரூபித்து காட்ட வேண்டிய அவசியமே கிடையாது. அவரை போன்ற வீரர்கள் அழுத்தமான சூழல்களில் தான் பலம் பெறுவார்கள். ஏனென்றால் அழுத்தங்களும், கடினமான சூழல்களும் தான் ஒரு வீரரின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வைக்கும். கோலியை இப்படி பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என ரோஜர் பின்னி கூறினார்.

அடுத்த போட்டி

அடுத்த போட்டி

இந்திய அணி தனது அடுத்த போட்டியாக தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் மோதும் போட்டி பெர்த்தில் உள்ள மைதானத்தில் நாளை ( அக்டோபர் 30 ) மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதிலும் விராட் கோலியின் இன்னிங்ஸ் தான் இந்தியாவுக்கு பெரும் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, October 29, 2022, 11:34 [IST]
Other articles published on Oct 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+