
2வது டெஸ்ட் போட்டி
இந்திய அணியை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் மிடில் ஆர்டரில் மோசமாக சொதப்பியது. லோயர் ஆர்டரில் மட்டும் ஜடேஜா - அக்ஷர் ஆகியோர் காப்பாற்றவில்லை என்றால் சிரமம் ஏற்பட்டிருக்கும். இந்த சிக்கலுக்கு காரணம் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாதது தான். முதுகில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முதல் டெஸ்டில் இருந்து விலகிய அவர், அடுத்த போட்டியில் வந்துவிடுவார் எனக்கூறப்பட்டது.

உடற்தகுதி தேர்வு
அதன்படி பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஸ்ரேயாஸ் ஐயர், முழுமையாக குணமடைந்துவிட்டார் என கூறப்பட்டுள்ளது. உடற்தகுதி தேர்விலும் தேர்ச்சியடைந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும் அவரை 2வது டெஸ்ட் போட்டிக்கு அவரை சேர்க்க இந்திய அணி தயாராக இல்லை என தெரிகிறது. இதற்கு காரணம் புதிய விதிமுறை தான்.

என்ன காரணம்
அதாவது என்னதான் ஒரு வீரர் ஃபிட்னஸில் தேர்ச்சி பெற்றாலும் நேரடியாக ஒரு போட்டியில் கொண்டு வர தயாராக இல்லை. உள்நாட்டு தொடர்களில் விளையாடி ஃபார்மை நிரூபித்துவிட்டு தான் வரவேண்டுமாம். அதன்படி தான் ஜடேஜா சமீபத்தில் ரஞ்சிக்கோப்பையில் தமிழ்நாடு அணிக்கு எதிராக 7 விக்கெட்களை கைப்பற்றி நிரூபித்தார். தற்போது அதே போல ஸ்ரேயாஸ் ஐயருக்கு இரானி கோப்பை கொடுக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ நிபந்தனை
இரானி கோப்பையில் மத்திய பிரதேசம் மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகள் வரும் மார்ச் 1ம் தேதி முதல் மோதவுள்ளன. இதில் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயரையும் சேர்த்து விளையாட வைக்கவுள்ளனர். ஒருவேளை அவர் 90 ஓவர்களிலும் எந்தவித உடல் தொந்தரவுகளும் இன்றி நன்றாக விளையாடிவிட்டால் ஆஸ்திரேலியாவுடனான 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 & 4 வது டெஸ்ட் போட்டிகளுக்கு இன்னும் இந்திய அணி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











