மும்பை:இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குப் போட்டியாக உருவாக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் லீக்கின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் கபில்தேவை, தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியிலிருந்து கிரிக்கெட் வாரியம் நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்தியா கேவலமாக வெளியேறியதால் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. திறமையான, தகுதி வாய்ந்த வீரர்களை தேர்வு செய்யத் தவறியதே இந்த நிலைக்குக் காரணம் என இந்திய கிரிக்கெட் வாரியத்தை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
![]() |